நடிகை தமன்னா தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திரைபடங்களில் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய தமன்னா ” திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு ஆண்கள் தான் மிகவும் சங்கடப்படுகிறார்கள். நடிகர்களும் சாதாரண மனிதர்கள் என்பதை புரிந்து கொண்டால் போதும், இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு வேண்டாம். அந்த மாதிரி காட்சிகளில் நெருங்கி நடித்தால் நடிகைகள் ஏதேனும் நினைத்து விடுவார்களோ என்று பெண்களை விட ஆண்கள் தான் சங்கடப்படுகிறார்கள். மேலும் சிலர் இது போல காட்சிகளில் நடிக்க ரொம்பவே வெட்கப்படுகிறார்கள் ” என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை தமன்னா, போலா சங்கர் எனும் தெலுங்கு திரைப்படத்திலும், பாந்த்ரா எனும் மலையாள படத்திலும், போலே சூடியன் எனும் ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…