நடிகர் சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். நந்தா, பிதாமகன், ஆகிய படங்களை தொடர்ந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ளார்கள். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 41” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை 2D நிறுவனம் சார்பில் சூர்யாவும் & ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படம் ஜெய்பீம் படம் போன்று கருத்துக்கள் கூறும் வகையில், படமாக்கப்படவுள்ளதால், OTT-யில் வெளியீட அதிக வாய்ப்புகள் உள்ளதாம். மேலும் இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். பொறுத்திருந்து இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறதா அல்லது OTT-யில் வெளியாகிறதா என்பதை பார்ப்போம்.
மேலும், நடிகர் சூர்யா இந்த படத்தை ஒரு மாதத்திற்குள் முடித்து விட்டு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…