நடிகர் சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். நந்தா, பிதாமகன், ஆகிய படங்களை தொடர்ந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ளார்கள். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 41” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை 2D நிறுவனம் சார்பில் சூர்யாவும் & ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படம் ஜெய்பீம் படம் போன்று கருத்துக்கள் கூறும் வகையில், படமாக்கப்படவுள்ளதால், OTT-யில் வெளியீட அதிக வாய்ப்புகள் உள்ளதாம். மேலும் இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். பொறுத்திருந்து இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறதா அல்லது OTT-யில் வெளியாகிறதா என்பதை பார்ப்போம்.
மேலும், நடிகர் சூர்யா இந்த படத்தை ஒரு மாதத்திற்குள் முடித்து விட்டு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…