Categories: சினிமா

விஜயகாந்த் உடல்நிலை…விஜய்க்கு முன் முந்திய சூர்யா.! கோடானகோடி வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்..

Published by
கெளதம்

அண்ணன் விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் என சூர்யா ட்வீட் செய்திருக்கிறார். ஆனால், தளபதி விஜய் ஏன் இன்னும் விஜயகாந்த் குறித்து நலம் விசாரிக்கவில்லை என்று கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியானது.

அதில், அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரது குடும்பத்தினர் சார்பாக, அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார் என்றும், யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும்  விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  அதுபோல், சில திரையுலக பிரபலங்களும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை – மருத்துவமனை அறிக்கை

அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் நடிகர் விஜயகாந்த், நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று சூர்யா விருப்பம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாக பங்கேற்கிறேன். கோடான கோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும். அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்று நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரையுமே கூறலாம். இப்படி, இருக்கையில், இவர்களது ஆரம்ப கட்ட சினிமா கலக்கட்டங்களில் அவர்கள் சந்தித்த அவமானங்கள் பல உண்டு. எஸ். ஏ. சந்திரசேகர் மூலமாக விஜய்யும், சிவகுமார் மூலமாக சூர்யாவும் சினிமாக்குள் நுழைந்தன, அப்போது இவர்களுக்கு ஒரு வகையில், விஜயகாந்த் அவர்கள் கைகொடுத்தார் என்றே சொல்லலாம்.

கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார் – வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்..!

ஆம், எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘பெரியண்ணா’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுபோல், விஜயகாந்த் நடிப்பில் வெளியான செந்தூரப் பாண்டி படத்தில் விஜய்யை நடிப்பதற்கு ஓகே சொல்லிருப்பார். இவ்வாறு, விஜய்- சூர்யா ஆரம்ப கால சினிமா காலகட்டங்களில் தனது படங்களில் இவர்களை தோள் தட்டி கொடுத்தவர்.

இப்படி இருக்கையில், அந்த மூத்த நடிகரின் உடல்நலம் விசாரிப்பது தானே நல்ல நடிகருக்கு அழகு. அந்த விமர்சனத்துக்கு இடம் கொடுக்காமல், நடிகர் சூர்யா விஜய்க்கு முன்னதாகவே, கேப்டன் விஜயகாந்தின் உடலம் குறித்து செய்தி வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago