ஜெய் பீம் திரைப்பட சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை என்பதால், சில நாட்கள் வெளிநாடு சென்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்ப சூர்யா முடிவு எடுத்ததாக தெரிகிறது.
சூர்யா நடிப்பில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் எந்தளவுக்கு ஆதரவை சம்பாரித்ததோ அந்த அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தது, சந்தித்தும் வருகிறது. பாமக மற்றும் வன்னியர் சங்கத்திடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
இதற்கு இரு தரப்பில் இருந்தும் அறிக்கைகளும் வெளியாகி கொண்டு இருந்தன. மேலும், அச்சுறுத்தல்கள் இருக்கிறது. அதன் காரணமாக அசம்பாவிதங்கள் நடந்துவிட கூடாது என சூர்யா வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு நிற்கின்றனர்.
இதன் காரணமாக நடிகர் சூர்யா மன உளைச்சலில் இருக்கிறாராம். இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டாலும் சர்ச்சை தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், சற்று இதிலிருந்து விலகி இருக்க சூர்யா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
அதனால், விரைவில், குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளாராம். அநேகமாக அவர் துபாய் நாட்டிற்கு செல்வார் என கூறப்படுகிறது. வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் நிற்பதால் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் சூர்யா என தெரிகிறது.
இந்த சர்ச்சைகள் கொஞ்சம் தணிந்த பின்னர் மீண்டும் இந்தியா வர சூர்யா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…