எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நடிகர் சூர்யா தங்க செயின் பரிசளித்துள்ளாராம்.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் நேற்று இனிதே நிறைவு பெற்றது. இதனை இயக்குனர் பாண்டிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால், அடுத்தடுத்த அப்டேட்கள் வரிசைகட்டி வரும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இப்படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களும் நடிகர் சூர்யா தங்க செயின் பரிசளித்துள்ளாராம். லைட் மேன் முதல் மூத்த டெக்னீஷியன்கள் வரை அனைவருக்கும் இந்த பரிசு கிடைத்துள்ளதாம். இந்த தகவல் தற்போது சினிமாவாசிகள் மூலமாக வெளியே வந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவலோ அல்லது புகைப்படங்களோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், வினய், சூரி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த வருட கிருஸ்துமஸ் விடுமுறை அல்லது அடுத்தவருட பொங்கல் விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…