எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நடிகர் சூர்யா தங்க செயின் பரிசளித்துள்ளாராம்.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் நேற்று இனிதே நிறைவு பெற்றது. இதனை இயக்குனர் பாண்டிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால், அடுத்தடுத்த அப்டேட்கள் வரிசைகட்டி வரும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இப்படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களும் நடிகர் சூர்யா தங்க செயின் பரிசளித்துள்ளாராம். லைட் மேன் முதல் மூத்த டெக்னீஷியன்கள் வரை அனைவருக்கும் இந்த பரிசு கிடைத்துள்ளதாம். இந்த தகவல் தற்போது சினிமாவாசிகள் மூலமாக வெளியே வந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவலோ அல்லது புகைப்படங்களோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், வினய், சூரி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த வருட கிருஸ்துமஸ் விடுமுறை அல்லது அடுத்தவருட பொங்கல் விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…