பெங்களூரை சேர்ந்த சௌமியா எனும் ரசிகை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீடியோ மூலம் ஆறுதல் வார்த்தை கூறி தேற்றியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் உடல் னால குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிந்தால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் எடுக்கும் அளவிற்கு எல்லையில்லா அன்பை பொழியும் ரசிகர்கள் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அதே போல, ரஜினிகாந்த் எந்த மேடையில் ஏறினாலும், என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய என் ரசிகர்கள் என்றே கூறி ஆரம்பிப்பார். ரசிகர்கள் நலனுக்காக பல்வேறு உதவிகள் செய்து வருவார்.
அண்மையில், பெங்களூருவை சேர்ந்த சௌமியா எனும் ரஜினி ரசிகை ஒருவர் நோய் வாய்ப்பட்டு இருந்துள்ளார். அவர் ரஜினியை சந்திக்க வேண்டும் என தனது ஆசையை கூறியுள்ளார். சௌமியாவின் தந்தை ஒரு வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அதனை பார்த்த நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி வீடியோ மூலம் அந்த ரசிகையை நலம் விசாரித்துள்ளார்.
அவர் பேசிய அந்த கள்ளம் கபடமில்லா பேச்சில் சிலவை, ‘ ஹலோ சௌமியா எப்படி இருக்க? நல்ல இருக்கனும். உனக்கு ஒன்னும் ஆகாதுகண்ணா, தைரியமாக இரு. பயப்படாதமா. சாரி கண்ணா கொரோனா காலம்ங்கிறதால என்னால உன்ன இப்போ நேர்ல பக்க முடியல. எனக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்ல. உனக்காக நா பிரே பண்ணுறேன். ஆண்டவன் இருக்கான் உனக்கு ஒன்னும் ஆகாது. இல்லனா நேர்ல வந்து பாத்து இருப்பேன்.’ என தனது ஆறுதல் வார்த்தைகள் மூலம் சௌமியாவுக்கு சிறிய சந்தோசத்தை அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…