வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Published by
பால முருகன்
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஹிட்டான திரைப்படம் வின்னர். இந்த திரைப்படத்தில் வடிவேலு, கிரண் ரத்தோட், ரியாஸ் கான், எம். என்.நம்பியார், நிரோஷா, எம்.என்.ராஜம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

காலங்கள் கடந்தும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நல்ல காமெடி படமாக இந்த படம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி படத்தை தான் காப்பி அடித்து எடுத்ததாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” வின்னர் படத்தை இயக்குவதற்கு முன்பு தயாரிப்பாளர் என்னிடம் ஒரு கேசட் கொடுத்து இதில் நிறைய தெலுங்கு படம் இருக்கிறது நீங்கள் இதனை பார்த்துவிட்டு எதாவது படம் பிடித்து இருந்தால் சொல்லுங்கள் நாம் ரீமேக் செய்யலாம் என்று கூறினார். நான் அந்த படங்களை பார்த்தவுடன் ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டேன். ஏனென்றால், என்னுடைய படத்தை பார்த்து அப்படியே படத்தை எடுத்து வைத்து இருந்தார்கள்.

இதனால் எனக்கு ரொம்பவே கோபம் வந்துவிட்டது. என்னுடைய படத்தை காப்பி அடித்து எடுத்த அந்த இயக்குனர் மீது கோபம் வரவில்லை மொத்தமாகவே தெலுங்கு சினிமா மீதே கோபம் வந்துவிட்டது. என்னுடைய 3 படத்தை காப்பி அடிச்சு எடுத்து வைத்துவிட்டீர்களா? நான் உங்களை பழி வாங்குறேன் என்று தான் வின்னர் படத்தை எடுத்தேன்.

வின்னர் படத்தை தெலுங்கு படங்களை பார்த்து தான் காப்பி அடித்து எடுத்தேன். 4 படங்களை காப்பி அடித்து எழுதிய படம்தான் ‘வின்னர்’. ஹீரோவை ஹீரோயின் அடி வாங்க வைப்பது போல ஒரு படத்தில் இருந்த காட்சியை அப்படியே வைத்தால் சரியாக இருக்காது என்பதால் ‘இதோ வந்துட்டேன்’ என வடிவேலு குறுக்கே வந்து விழும் காட்சியை எடுத்தேன்.

நான் தெலுங்கில் இருந்து காப்பி அடித்ததை, அப்படியே காப்பி அடித்து வேறொரு தெலுங்கு படத்தில் வைத்துவிட்டார்கள். அப்போது என்னுடைய தோல்வியை நான் ஒப்புக்கொண்டேன். பழிவாங்குவதிலும் தோல்வி அடைந்துவிட்டேன்” எனவும் இயக்குனர் சுந்தர் சி கலகலப்பாக பேசியுள்ளார். மேலும் சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 படம் வரும் மே 3- தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

9 hours ago
GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

10 hours ago
RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

11 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

12 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

15 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

16 hours ago