Suchitra about Bayilvan Ranganathan [File Image]
சென்னை : பயில்வான் ரங்கநாதன் அவமானம் பட்டு சாகவேண்டும் என பாடகி சுசித்ரா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களை பற்றி பேசுவது வழக்கமான ஒன்று. இவர் பேசியது சில பிரபலங்களுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்துவதால் பல பிரபலங்கள் அவரை தீட்டுவதும் உண்டு. அந்த வகையில், பிரபல பாடகியான சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார்.
இது குறித்து பேசிய பாடகி சுசித்ரா ” நான் பல ஆண்டுகளாக சினிமா துறையில் பாடல்களை பாடி கொண்டு இருக்கிறேன். ஒரு முறை கூட பயில்வான் ரங்கநாதனை நேரில் சந்தித்தது கூட இல்லை. ஆனால், என்னை பற்றி அவர் தவறாக பல விஷயங்களை சொன்னார் நான் ஹோட்டல் ரூமில் இருந்தேன் என்று சொன்னார். இப்படி எல்லாம் இல்லாததை சொல்வது ரொம்பவே தவறாக இருக்கிறது.
எனக்கும் அவருக்கு தனிப்பட்ட முறை எந்த பிரச்சனையும் கூட இல்லை அப்படி இருக்கையில் என்னை பற்றி ஏன் ஆவர் இப்படி பேசினார் என்று புரியவில்லை. அவர் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் செய்து கொடுக்கும்ஏஜெண் வேலையை செய்து கொண்டு இருந்தவர். அப்போதெல்லாம் அந்த மாதிரி படங்கள் எல்லாம் அதிக அளவு கேரளாவில் மட்டுமே தான் இருந்தது. ஆனால், அந்த கலாச்சாரத்தை தமிழகத்தில் கொண்டு வந்தது பயில்வான் தான்.
அதன்பிறகு தான் படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு சினிமாவில் பிரபலங்களை பற்றி கிசு கிசுக்களை பேசினார். அவரை பற்றி பேசினாலே கோபம் தான் வருகிறது. அவர் சீக்கிரமே சாகவேண்டும். அவருடைய சாவு எப்படி இருக்கணும் தெரியுமா, எல்லாரு முன்னாடியும் அவமானப்பட்டு, நடுரோட்டில் கதறி அழுது தினம் சாகணும். நாசமா போ, செத்துப்போ, அப்போத்தான் அவரோட மகள் உருப்புடுவாங்க ” எனவும் மிகவும் காட்டத்துடன் சுசித்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…