நடிகர் சிம்பு தற்போது “பத்து தல” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான டீசர் கூட நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வருகின்ற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து பத்து தல படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகின்ற மார்ச் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக இருப்பது வேண்டும் என்பதற்காக பல பிரபலங்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் மிக முக்கியமான ஒரு பிரபலம் என்றால் சூர்யா தான். அட ஆமாங்க பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்து கொள்ள உள்ளாராம். ஏனெனில், சூர்யாவின் வரவிருக்கும் திரைப்படமான “சூர்யா 42” படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது.
அதே நிறுவனம் தான் பத்து தல படத்தையும், தயாரிக்கிறது. அதையும் தாண்டி சூர்யாவும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள் எனவே நட்பு ரீதியாக இருக்க வேண்டும் என்பதற்காக சூர்யாவை அவர் அழைத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. எனவே சூர்யா வருவதே கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுதி என சினிமாவட்டத்தில் சொல்கிறார்கள்.
மேலும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42- வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…