சினிமா

ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சினேகன்!

Published by
பால முருகன்

பருத்திவீரன் படம் எடுக்கப்பட்டு வந்த சமயத்தில் படத்தின் இயக்குனர் அமீர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியயோருக்கு இடையே மன கசப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இருந்து இப்போது வரை இருவரும் பேசிக்கொள்ளாமலே இருக்கிறார்கள். பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் கடுமையாக தாக்கி ஞானவேல் ராஜா சமீபத்தில் பேசியது பெரும் பரப்பரப்பையே  ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக பிரபலங்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அப்படி ஞானவேல் ராஜா என்ன பேசினார் என்றால் பருத்திவீரன் திரைப்படம் மொத்தமாக 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய ஒரு திரைப்படம். ஆனால் அமீர் சொன்னதை விட படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது.

அந்த 2 நடிகர்களுடன் நடிச்சே ஆகணும்! நடிகை ராஷ்மிகா மந்தனா ஆசை!

பருத்திவீரன் தான் என்னுடைய முதல் படம் எனவே, கணக்கு விஷயத்தில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார்.பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” என்பது போல விமர்சித்து பேசியிருந்தார். இவர் இப்படி பேசியவுடன் அமீர் ” ஞானவேல் சொல்வது கொஞ்சம் கூட உண்மை இல்லை என்னுடைய பெயரை கெடுக்கவே இப்படி செய்கிறார்” என அறிக்கையை வெளியீட்டி இருந்தார்.

அதன்பிறகு சசிகுமார் அமீருக்கு ஆதரவாக இறங்கி “அண்ணன் அமீர் இயக்குனர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்பொழுது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குனர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம்” என்று கூறியிருந்தார்.

சசிகுமாருக்கு பிறகு சமுத்திரகனி, பொன்வண்ணன் உள்ளிட்ட பிரபலங்களும் அமீருக்கு ஆதரவாக பேசினார்கள். அவர்களை தொடர்ந்து பருத்திவீரன் படத்தில் பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் என ஞானவேல் ராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்” என அமீருக்கு ஆதரவாக சினேகன் பேசியுள்ளார்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

10 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

10 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

10 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

11 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago