பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விசிட் அடித்த சிவகார்த்திகேயன்.!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்தனர்.

unknown node

PrinceSK [Image Source : Google ]

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் முருகன் கோயிளுக்கு தனது குடும்பத்துடன் சென்று சாமியை வழிபாடு செய்துள்ளார். சிவகார்த்திகேயனை கோவிலில் பார்த்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக அவரை சுற்றி கூடினார்கள்.

unknown node

Sivakarthikeyan in Thiruchendur [Image Source : Google ]

சில தங்களுடைய போனை எடுத்து சிவகார்த்திகேயனுடன் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்துக்கொண்டார்கள். அவரும் அங்கிருந்த அனைவர்க்கும் கையை அசைத்துவிட்டு தரிசனத்தை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பினார்.

unknown node

Sivakarthikeyan in Thiruchendur [Image Source : Google ]

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து முதல் பாடல் நேற்று தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.