சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத்திற்காக வெளிநாட்டில் இருந்து கதாநாயகியை அறிமுகமாக்க படக்குழு புதிய வெளிநாட்டு ஹீரோயினை தேடி வருகிறதாம்.
தற்போதைய தென்னிந்திய சினி வட்டாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் தமிழ் இயக்குநர்களுடனும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் நடிகர்களுடன் கூட்டணி வைத்து இரண்டு மொழிகளிலும் தடம் பாதிக்க நடிகர்கள் முயன்று வருகின்றனர்.
அந்த வகையில், சிவகார்த்திகேயனும் தெலுங்கு இயக்குனர் உடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் அடுத்த படத்திற்கு இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தின் கதைக்களமானது, வெளிநாட்டில் இருந்து வரும் வெளிநாட்டு பெண்ணை, இங்குள்ள பையன் எப்படி காதலித்து கரம் பிடிக்கிறான் என்பது போல காமெடி கமர்சியல் கலந்து அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதற்காக மதராசபட்டினம் படத்திற்காக எமி ஜாக்சன் இறக்குமதி ஆனது போல வெளிநாட்டில் இருந்து நாயகியை இறக்குமதி செய்ய படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறதாம். இந்த படத்திற்கான ஷூட்டிங் பொங்கல் முடிந்து தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…