சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத்திற்காக வெளிநாட்டில் இருந்து கதாநாயகியை அறிமுகமாக்க படக்குழு புதிய வெளிநாட்டு ஹீரோயினை தேடி வருகிறதாம்.
தற்போதைய தென்னிந்திய சினி வட்டாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் தமிழ் இயக்குநர்களுடனும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் நடிகர்களுடன் கூட்டணி வைத்து இரண்டு மொழிகளிலும் தடம் பாதிக்க நடிகர்கள் முயன்று வருகின்றனர்.
அந்த வகையில், சிவகார்த்திகேயனும் தெலுங்கு இயக்குனர் உடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் அடுத்த படத்திற்கு இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தின் கதைக்களமானது, வெளிநாட்டில் இருந்து வரும் வெளிநாட்டு பெண்ணை, இங்குள்ள பையன் எப்படி காதலித்து கரம் பிடிக்கிறான் என்பது போல காமெடி கமர்சியல் கலந்து அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதற்காக மதராசபட்டினம் படத்திற்காக எமி ஜாக்சன் இறக்குமதி ஆனது போல வெளிநாட்டில் இருந்து நாயகியை இறக்குமதி செய்ய படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறதாம். இந்த படத்திற்கான ஷூட்டிங் பொங்கல் முடிந்து தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…