சிவகார்த்திகேயனுக்காக வெளிநாட்டில் இருந்து நாயகியை இறக்குமதி செய்யும் படக்குழு.!

Default Image

சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத்திற்காக வெளிநாட்டில் இருந்து கதாநாயகியை அறிமுகமாக்க படக்குழு புதிய வெளிநாட்டு ஹீரோயினை தேடி வருகிறதாம்.

தற்போதைய தென்னிந்திய சினி வட்டாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் தமிழ் இயக்குநர்களுடனும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் நடிகர்களுடன் கூட்டணி வைத்து இரண்டு மொழிகளிலும் தடம் பாதிக்க நடிகர்கள் முயன்று வருகின்றனர்.

அந்த வகையில், சிவகார்த்திகேயனும் தெலுங்கு இயக்குனர் உடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் அடுத்த படத்திற்கு இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தின் கதைக்களமானது, வெளிநாட்டில் இருந்து வரும் வெளிநாட்டு பெண்ணை, இங்குள்ள பையன் எப்படி காதலித்து கரம் பிடிக்கிறான் என்பது போல காமெடி கமர்சியல் கலந்து அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதற்காக மதராசபட்டினம் படத்திற்காக எமி ஜாக்சன் இறக்குமதி ஆனது போல வெளிநாட்டில் இருந்து நாயகியை இறக்குமதி செய்ய படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறதாம். இந்த படத்திற்கான ஷூட்டிங் பொங்கல் முடிந்து தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்