sk21 leaked [file image]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21-வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்க மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்காலிகமாக SK21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் பெரிய ஷெட்யூல் காஷ்மீரில் நடைபெற்றது. காஷ்மீரில் 75 நாட்கள் நடந்தது.
இந்த முதல் ஷெட்யூலை வெற்றிகரமாக முடித்ததை படக்குழுவினர் கொண்டாடினர். இப்பொது அடுத்த ஷெட்யூல் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம்.
25 கோடிக்கு மல்லுக்கட்டிய கமல்ஹாசன்…தலைசாய்க்காத தயாரிப்பு நிறுவனம்!
தற்போது சென்னையில் வெளுத்த வாங்கிய கனமழையால் ஊரே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. SK21 படக்குழு சென்னையில் சில இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில், இரவு மழை பெய்யும் பொழுது, சில காட்சிகளை தனியாக வீடு ஒன்றை எடுத்து படம்கியுள்ளனர். அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இதனால், ரசிகர்கள் சற்று அப்செட் ஆகி, அதனை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
அந்த வீடியோவில், நடிகை சாய் பல்லவி கையில் ஒரு பெண் குழந்தையுடன் நடிக்கிறார். இந்நிலையில், படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியும் கணவன் மனைவியாக நடிப்பதும், அவர்ககேள் இருவருக்கும் குழந்தையாக ஒரு பெண் குழந்தை நடிப்பதாக தெரிகிறது. இது உண்மை என்றால், சிவகார்த்திகேயன் கேரியரில் காதல் செய்து கல்யாணம் முடிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். முதல் முறையாக கணவன் மனைவியாகவும், அவருக்கு ஒரு குழந்தை இருப்பது போலவும் இந்த படம் உருவாகி வருவதாக தெரிகிறது.
இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், மாவீரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல அயலான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12-ஆம் தேதி வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…