இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் யோகி பாபு, இஷா கோப்பிகர், கருணாகரன், பானுப்ரியா, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நான் அந்த ராமசாமி இல்ல! சர்ச்சையில் சிக்கிய சந்தானம்!
இந்த அயலான் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் ஒரு பக்கம் குவிந்து வரும் நிலையில், படத்தின் வசூலிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியான 5 நாட்களிலே 50 கோடி வசூல் செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அயலான் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் ” அயலான் 2 – பாகம் 2 கண்டிப்பாக நடக்கும். இந்தப் படத்துக்காகச் சொல்லவில்லை.. நிஜமாகவே இதற்கு ஒரு ஐடியா இருக்கிறது.இப்போது உங்களுக்கு ஏலியன் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.. எனவே அடுத்த பாகத்தில் உள்ள சிறு தவறுகளை சரி செய்து வெளியிடுவோம்” எனவும் கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…