Categories: சினிமா

எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அந்தர் பல்டி அடித்த சிவகார்த்திகேயன்!

Published by
பால முருகன்

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை PhantomFX Studios நிறுவனம் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நேற்று சென்னையில் நடைபெற்றது.

லிப் லாக் காட்சியா? கமல் படத்தால் கதறி அழுத மீனா! 

அந்த விழாவில் சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குனர் ரவிக்குமார், கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஜெயம் ராஜேஷ் , உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜெயம் ராஜேஷ் ” விழாவில் பேசும்போது கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் ஜெயம் ராஜேஷ் ” தெலுங்கு சினிமாவில் பாகுபலி , கன்னட சினிமாவில் கேஜிஎஃப் போன்று தமிழ் சினிமாவில் அயலான் படம் கண்டிப்பாக இருக்கும்” என பேசியிருந்தார்.

இவர் இப்படி பேசியவுடன் கீழே கேட்டுக்கொண்டு இருந்த சிவகார்த்திகேயன் சற்று அதிர்ச்சியாகி சிரித்துக்கொண்டே பார்த்தார். பிறகு மேடையில் பேசுவதற்காக வந்த சிவகார்த்திகேயன் ” தயாரிப்பாளர் பேசியதற்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. படம் அவருடைய படம் என்பதால் அதன் மீது இருக்கும் நம்பிக்கையை வைத்து அப்படி பேசி இருக்கிறார். படம் பொங்கலுக்கு வருகிறது பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் சொல்லுங்கள்” எனவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Recent Posts

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

22 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

51 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago