நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.
அந்த திரைப்படத்தை இதற்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான “ஸ்பைடர்” திரைப்படத்தை தயாரித்திருந்த பிரசாத் என்.வி. என்பவர் தான் தயாரிக்கவுள்ளாராம். மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை குறைந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி, இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் 5 கோடி சம்பளத்தை குறைத்து 15 கோடி சம்பளம் மட்டுமே வாங்கவுள்ளாராம். ஏனென்றால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தை பிரசாத் என்.வி. தயாரிக்கிறார் என்பதால் கண்டிப்பாக தமிழையும் தாண்டி தெலுங்கு மொழியிலும் வெளியீட திட்டமிடுவார்.
எனவே, இந்த மாதிரி ஒரு திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்றால், தன்னுடைய சம்பளத்தை சற்று குறைத்தால் மட்டுமே இந்த படத்தை 80 கோடி பட்ஜெட்டில் எடுக்க முடியும், 100 கோடிகளுக்கு படத்தை தயாரிப்பாளர் வியாபாரம் செய்வார் சம்பளத்தை அதிகமாக கேட்டால் இந்த படத்தை பண்ண முடியாது என்கிற காரணத்தால் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…