சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு – தமிழ் என இருமொழிபடமாக உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரேம் ஜியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
சில விஷயங்களை தமிழ் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது. அப்படி பிரித்தாலும் அது ரசிகர்கள் ரசிக்கும் படி அமைவது கடினம். அப்படி சில கூட்டணிகள் தமிழ் சினிமாவில் உண்டு. அதில் ஒரு கூட்டணி தான் வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் ஹீரோ நண்பர் கதாபாத்திரத்தில் பிரேம் ஜி நடிப்பது.
அண்ணன் வெங்கட் பிரபு படைகளை தவிர பெரும்பாலும் வேறு படங்களில் பிரேம் ஜி நடிப்பதில்லை. அப்படி நடித்தாலும் அந்த படம் பெரிய வரவேற்பு பெறுவதில்லை. அப்படி, கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் பிளாக் பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்த மாநாட்டில் அதிக நேரம் வராவிட்டாலும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரேம் ஜி நடித்திருந்தார்.
தற்போது வெளியான தகவலின் படி, சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதிப் என்பவரது இயக்கத்தில் தமிழ் – தெலுங்கு என இருமொழிபடமாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். அதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கிட்டத்தட்ட ஹீரோக்கு அடுத்தபடியான கதாபாத்திரமான அதில் பிரேம் ஜியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
வெங்கட் பிரபு அடுத்த படம் ஏதும் தற்சமயம் அறிவிக்கவில்லை என்பதால், நிச்சயம் சிவகார்த்திகேயன் படத்தில் பிரேம்ஜி இருப்பார் என கூறப்படுகிறது. விரைவில் அந்த படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…