இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான ரவிக்குமார் இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதனை வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவை மிரள வைத்த சிவகார்த்திகேயன்!! கண்ணை கவரும் ‘அயலான்’ ஏலியன்கள்…
படத்திற்கான டிரைலரும் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படத்திற்கான சிஜி வேலைகள் முடியாமல் இருந்த நிலையில், ஒரு வழியாக சிஜி வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அயலான் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து ஒரு திரைப்படம் செய்யவிருந்தார்களாம். பிறகு அயலான் படமே முடியாத காரணத்தால் அந்த திட்டம் அப்படியே இருப்பதாகவும் அயலான் படம் வெளியான பிறகு கண்டிப்பாக அந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் படம் செய்வது குறித்து இயக்குனர் ரவிக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நானும் சிவகார்த்திகேயனும் அயலான் படத்திற்கு பிறகு ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற இருந்தோம். ஆனால், அயலான் படம் முடிய தாமதமான காரணத்தால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை.
நான் சிவகார்த்திகேயனிடம் பல கதைகளை கூறி இருக்கிறேன். ஒரு கதையை தயார் செய்துவிட்டு அதனை சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுப்பேன். தற்போது அயலான் படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வெளியான பிறகு நானும் சிவகார்த்திகேயனும் இணைந்து செய்யக்கூடிய அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும்” என இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா…