Categories: சினிமா

அயலான் படத்திற்கு நம்பி வாங்க சந்தோஷமா போங்க! சிவகார்த்திகேயன் பேச்சு!

Published by
பால முருகன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்குமோ அதனை மையமாக வைத்து இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், பானுப்ரியா, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தினை பார்த்த மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

கமல்ஹாசன்-ஸ்ரீவித்யா திருமணம் நடைபெறாத காரணம் இதுதான்! உண்மையை உடைத்த பிரபலம்!

இதற்கிடையில், அயலான் படத்தின் முதல் நாள் முதல்காட்சியை பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கிற்கு வருகை தந்தார். அப்போது அயலான் படம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” மக்களுக்கு புது விதமான ஒரு அனுபவத்தை இந்த படம் மூலம் கொடுக்கவேண்டும் என்று நினைத்தோம்.

இந்த படத்தை பார்க்கும் போது கண்டிப்பாக அனைவர்க்கும் படம் பிடிக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் வெளியே செல்லவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் கண்டிப்பாக நம்பி அயலான் படத்திற்கு வருகை தரலாம். கண்டிப்பாக படம் அவர்களுக்கு பிடிக்கும்.

இந்த மாதிரி நம்ம தமிழ் சினிமாவில் படம் எடுப்பது மிகவும் குறைவு எனவே, அந்த மாதிரி ஒரு வகையை சேர்ந்த படத்தை தேர்வு செய்து நடித்தது எனக்கும் மிகவும் புது அனுபவமாக இருந்தது.  படம் வந்துவிட்டது படத்தை பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்று நீங்கள் தான் சொல்லவேண்டும். நம்பி படத்திற்கு வாருங்கள் சந்தோசமாக செல்லுங்கள்” எனவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

19 minutes ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

29 minutes ago

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

1 hour ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

2 hours ago

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

3 hours ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

4 hours ago