பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக  நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக  நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த நோயினால் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் கஷ்டப்படும் ஏழைமக்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் சார்பில், புதிய பேருந்து நிலையத்திற்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு கொரானா தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு கபசுரக் குடிநீர் வழங்கியுள்ளனர்.