எங்க தலைக்கு தில்ல பாத்தியா...! சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்.!

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார். சிங்கத்தை 6 மாதங்களுக்கு பராமரிக்க,

Featured image

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார். சிங்கத்தை 6 மாதங்களுக்கு பராமரிக்க, சிவகார்த்திகேயன் சுமார் ரூ.75,000 செலுத்தியுள்ளாராம்.

unknown node

sk lion [Image -APC]

சிங்கத்தை தத்தெடுப்பதற்கான கால அவகாசம் ஆறு மாதங்கள் என்று கூறப்படுகிறது.  இந்த செய்தி அவரது ரசிகர்கள் அனைவரிடமும் இந்த செய்தி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனா காலத்தில், வண்டலூர் பூங்காவில், விலங்குகள் பராமரிக்க முடியாமல் உயிரிழந்தன. இதையடுத்து விலங்குகளை தத்தெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, பலரும் விலங்குகளை தத்தெடுத்து வருகின்றனர்.

unknown node

Sivakarthikeyan [Image Source : Twitter/@Premkumar__Offl]

சிவகார்த்திகேயன் விலங்குகளை தத்தெடுப்பது இது முதல் முறையல்ல… தற்போது, சிங்கத்தை தத்தெடுத்த அதே இடத்தில் ஏற்கனவே யானை மற்றும் சிங்கத்தை தத்தெடுத்துள்ளார்.

unknown node

lion [Image -Cineulagam]

செப்டம்பர் 2021 இல், நடிகர் விஷ்ணு என்ற சிங்கத்தையும் பிரகிருதி என்ற யானையையும் அதே மிருகக்காட்சிசாலையில் இருந்து தத்தெடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, ஆறு மாத காலத்திற்கு அந்த விலங்குகளை தத்தெடுத்துள்ளாராம்.

unknown node

Sivakarthikeyan [Image source : file image]

தற்போது, மடோன் அஷ்வின் இயக்கி வரும் ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் வருகிறார். இது ஒரு அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் படமாகும். இவருடன் நடிகை அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.