Categories: சினிமா

நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் !!!

Published by
Dinasuvadu desk

திருமணம் செய்வதாக கூறி இளைஞர்களிடமும் தொழிலதிபர்களிடமும் பலகோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ருதி சமூக வலைதளம் மூலமாக ஏராளமான இளைஞர்களிடமும் தொழிலதிபர்களிடமும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் சேலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் பாலமுருகனிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணம் வாங்கியுள்ளார். நடிகை ஸ்ருதியின் அழகிலும் அவருடைய ஆசை வார்த்தைகளிலும் மயங்கிய பாலமுருகன் ஸ்ருதி கேட்க்கும் பொழுதெல்லாம் பணம் கொடுத்துள்ளார்.

இப்படியே கிட்டதட்ட 45 லட்சம் ரூபாய் வரை ஸ்ருதியிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளார். மேலும் திருமணத்தைக்குறித்து பேச்சு எடுக்கும்போதெல்லாம் ஸ்ருதி வெவ்வேறு காரணங்களைக் கூறி பாலமுருகனை ஏமாற்றியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன் ஸ்ருதி குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் நடிகை ஸ்ருதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் இதுபோன்று பல பேரிடம் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றியது தெரிய வந்தது.

இதனை அடுத்து ஸ்ருதி, அவரது தாயார் சித்ரா, தந்தை பிரசன்னா வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து போலீசார் கோவை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஸ்ருதி மீது மேலும் பல மோசடி புகார்கள் வந்ததால், அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து ஸ்ருதி மற்றும் அவரது தாயார் சித்ரா, தந்தை பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோர் மீது குண்டர்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

14 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

22 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago