சிம்பு – சுதா கொங்காரா நிச்சயம் ஒரு புதிய படத்தில் இணைவர் எனவும், அது சிம்புவின் 50வது திரைப்படமாகவும் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவிக்கு மாநாடு மிக பெரிய காம்பேக்கை கொடுத்துள்ளது. அந்த படத்தின் வெற்றி சிம்பு அடுத்த எந்த படத்தில் நடிக்கிறார் அப்படம் எப்போது வெளியாகிறது என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.
சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சியை சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்காரா பார்க்க வந்திருந்தார். அப்போது இருந்தே இருவரும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர் என்கிற பேச்சு எழுந்தது.
அதன் பின்னர், சிம்பு, வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என பிஸியாகிவிட்டார். அந்த படங்களை முடித்து தான் அடுத்த படம் நடிப்பார் என கூறப்படுகிறது. அதே போல சுதா கொங்கராவும் அடுத்து சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்யும் வேளைகளில் இறங்கியுள்ளாரம்.
சூரரை போற்று ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் கண்டிப்பாக சிம்பு – சுதா கொங்காரா ஒரு புதிய படத்தில் இணைவர் எனவும், அது சிம்புவின் 50வது திரைப்படமாகவும் இருக்கலாம் எனவும், அதனை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…