நடிகர் சிவகார்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். சிவகார்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாக உள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா, கருணாகரன், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
குஷ்பு மேலே சாய்ந்திருக்கும் பர்த்டே பாய் யார் தெரியுமா.?
ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பதனை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அந்த ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இதற்கு முன்னதாக, சிவகார்திகேயன் நடித்துள்ளாள் மாவீரன் படத்திற்கு விஜய் சேதுபதி கடவுள் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து.
என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே! நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்!
இதற்கிடையில், நடிகர் சித்தார்த் நடித்த தெலுங்லு திரைப்படமான ‘ஓ மை பிரண்ட்’ படத்தில் சித்தார்த்துக்கு தமிழ் டப்பிங் பேசியுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவும், அயலான் படத்தில் சித்தார்த் ஏலியனுக்கு குரல் கொடுக்க வந்துள்ளார் என்றே சொல்லலாம்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…