Kalabhavan Mani[File Image]
தமிழில் ஜெமினி படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கலாபவன் மணி, 2016 ல் தனது 45 வது வயதில் உயிரிழந்தார். நடிகர் மணியின் திடீர் மரணத்தில் சந்தேகமடைந்தனர். தையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியது.
இந்நிலையில், நடிகர் கலாபவன் மணி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம், இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழுவில் இடம்பெற்றிருந்த கேரள ஐபிஎஸ் பி.என் உன்னிராஜன், கலாபவன் மணி தினசரி 12-13 பாட்டில் பீர் குடித்ததே மரணத்துக்கு காரணம் என கூறி நடிகரின் மர்ம மரணத்திற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விசாரணை தொடங்கியதில், அவரது பண்ணை வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் மீட்டு, மேலும் மரணத்திற்கு முன்பு அவரை சந்திக்க வந்த அவரது நண்பர்கள் மற்றும் நடிகர்கள் ஜாபர் இடுக்கி, தரிகிடா சாபு மற்றும் பலர் உட்பட அங்கு இருந்த அனைவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
வெறும் 2 நாளில் ரூ.100 கோடி…சல்மான் கானின் புதிய சாதனை!
பின்பு, அவருக்கு தீராத நீரிழிவு நோயாளி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீரிழிவு நோய்க்கான மாத்திரையை சாப்பிடுவார் என்றும், இந்த நோயிக்காக தேர்வு காண மருத்துவரை சந்தித்ததில் மருத்துவர், இனிமேல் மது அருந்த கூடாது என்றும், அப்படி மீறி அருந்தினால் உயிரிருக்கே ஆபத்து என்று எச்சரித்துள்ளார்.
ஏற்கெனவே, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கலாபவன் மணிக்கு நாளடைவில் கல்லீரல் செயலிழந்துள்ளது. கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், அவர் பீர் குடிப்பதை கைவிடவில்லை. மரணமடைந்த 2016 மார்ச் 6ம் தேதியும் அவர் 12 பாட்டில் பீர் குடித்ததாகவும் அதில் மெத்தில் ஆல்கஹால் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
கூல் சுரேஷ் சும்மா லிப் -ஸ்டிக் போட்டு நடிச்சிட்டு இருக்காரு! கடுமையாக விமர்சித்த சுசித்ரா!
பொதுவாக, மதுபானம் உட்கொள்ளும் போது, அதில் மெத்தி ஆல்கஹாலின் சுவடு இருக்கும். ஆனால், அதுவே 100 மில்லி இரத்தத்தில் மெத்தில் ஆல்கஹாலின் அளவு 30 மில்லிக்கு மேல் இருந்தால், அது உயிருக்கு ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இவ்வாறு தனது மரணத்தை அவரே தேடிக் கொண்டதாக விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…