Categories: சினிமா

களைகட்டும் ‘ஜவான்’ ப்ரீ ரிலீஸ் விழா: ஷாருக்கான் வருகை கண்டு அரங்கமே அலறல்!

Published by
கெளதம்

‘ஜவான்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் ஷாருக்கான், நயன்தாரா, அட்லீ, விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டதால் அரங்கமே திருவிழா போல் கலைக்கட்டியுள்ளது.

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7-ஆன் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சிமர்ஜீத் சிங் நாக்ரா, அஸி பாக்ரியா, மன்ஹர் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஜவான் படத்திற்கான ட்ரைலர் , மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்ளுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமஷன் பணி தொங்கிய நிலையில், அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஒரு ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை நடத்த படக்குழு ஏற்பாடு செய்தனர். அதன்படி, இந்த நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 30) மாலை 3 மணிக்கு தொடங்கியது.

பிரபலங்கள் பலர் நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்த நிலையில், ரசிகர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர். இந்த நிகழ்விற்கு ஷாருக்கான், நயன்தாரா, அட்லீ, விஜய் சேதுபதி மற்றும் அனிருத் வருகை தந்துள்ளதால் ஒரு திருவிழா அரங்கமாக மாறியுள்ளன. தற்போது, நிகழ்விற்கு கிங் காங் என்று அழைக்கப்படும் ‘ஷாருக்கான்’ வருகையால் அரங்கமே ரசிகர்களின் அலறலால் கலகலப்பாக மாறியுள்ளது.

நிகழ்வுக்கு வருகை தந்தவுடன் ஷாருக்கான், விஜய் சேதுபதி – அனிருத்தை கட்டி அணைக்கும் முத்தமிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜவான் பட டிரெய்லர் நாளை (ஆகஸ்ட் 31) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் வீடியோ நாளை துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

17 minutes ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

47 minutes ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

1 hour ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

3 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

4 hours ago