பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் “பதான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புப் விறு விறுப்பாக முழுவேகத்தில் நடந்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, அசுதோஷ் ராணா போன்ற பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் தத்லானி, சேகர் ரவ்ஜியானி ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்கள்.
இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த 2018- ஆம் ஆண்டுக்கு பிறகு ஷாருக் கான் நடிப்பில் படம் எதுவும் திரைக்கு வரவில்லை. கடைசியாக “ஜீரோ” படம் 2018-ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து, இதனால் ” பதான்’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஷாருக்கான் சினிமாவிற்கு வந்து 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் பதான் படத்தின் (GLIMPSE)-ஐ வீடியோவை வெளியிட்டுள்ளது.
வீடியோவில் ஷாருக்கான் மிரட்டலான கொடூர லுக்கில் கையில் துப்பாக்கியுடன் வருகிறார். அதில் வரும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக ஈர்தது என்றே கூறலாம். இதற்கிடையில், ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்திழும் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு, ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…