தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை.
ஆனால் இவரது குற்றச்சாட்டு தொடர்பாக இயக்குநர் சுசி கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுகிறார்.லீனா மணிமேகலை கூறிய புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் சொல்வதெல்லாம் இட்டுக்கட்டிய பொய் என்று இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்தார்.
பின்னர் கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்தார்.கவிஞர் லீனா மணிமேலை மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குநர் சுசி கணேசன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மீ டூ-(#MeToo )வில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கேட்டு, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…