பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்த கேரள உயர்நீதிமன்றம்.!

பாலியல் வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

Siddique

கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த 2016 ஜனவரி 28ம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்காட் ஹோட்டலில் ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிக்குப் பிறகு, சித்திக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை போலீஸாரிடம் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, ‘அம்மா’ அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சித்திக் ராஜினாமா செய்தார். தற்பொழுது, அவரது ஜாமீன் மனுவை கேரள நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதனால், இந்த வழக்கில் விசாரணைக்காக நடிகர் சித்திக்கை பொலிஸார் கைது செய்ய வாய்ப்புள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகள் தவிர, சித்திக் மீது ஐபிசி பிரிவு 506 (கிரிமினல் மிரட்டல்) கீழ் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அம்பலப்படுத்தும் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து சித்திக் மீது அந்த இளம் நடிகை புகார் அளித்துள்ளார்.

நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது, பல நடிகைகள் பாலியல் வன்கொடுமை புகார்களை எழுப்பியதால், அந்த வழக்குகளை விசாரிக்க மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. மலையாள திரையுலகில் பெண்கள் அளித்த புகார்கள் தொடர்பாக, இதுவரை 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்