நடிகை ஷோபனா 15வருடங்களுக்கு பிறகு தற்போது ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தில் நாயகனாக சுரேஷ் கோபி நடிக்க இருக்கிறார்.
நடிகை ஷோபனா 90 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய நடிகைகளில் ஒருவர். இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.இவர் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.
இதையடுத்து நடிகை ஷோபனா பாரத நாட்டியத்தில் மிகவும் புகழ் பெற்றவர்.எனவே இவர் நடிப்பதை விட்டு விட்டு தற்போது முழு நேர பாரத நாட்டிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க வில்லை. இவர் இறுதியாக 2005 ஆம் ஆண்டு “மகளுக்கு” எனும் மலையாள படத்தில் இவர் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் மீண்டும் நடிக்க இருக்கிறாராம். பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன் அனூப் இயக்கும் படத்தில் ஷோபனா நடிக்க இருக்கிறாராம். அந்த படத்திலும் இவருக்கு ஜோடியாக சுரேஷ் கோபி நடிக்கிறாராம்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…