மதசார்பற்ற கொரோனா! சாதி, மதம், சொத்து போன்ற எதையும் பார்க்காமல் கொல்கிறது!

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை ராஷிகண்னா அவர்கள் கூறுகையில், ‘கோவிட்-19 வைரஸ் மதசார்பற்றது. மதத்தின் அடிப்படையில் மக்களை அது பிரிக்கவும் இல்லை. சாதி, மதம், சொத்து போன்ற எதையும் பார்க்காமல் அவர்களை தொற்றிக்கொள்கிறது. கொல்லவும் செய்கிறது. எனவே ஒருவரையொருவர் குற்றம் சொல்வதை விடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம்.’ என தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.