Satyaraj is villain [file image]
Sathyaraj: அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு எல்லாம் வில்லனாக நடித்தவர் நடிகர் சத்யராஜ், அப்போது பலருக்கும் வில்லனாக நடித்து பட்டைய கிளப்பினார் என்றே சொல்லலாம். அதிலும், இயக்குனர் மணிவண்ணனுடைய நூறாவது நாள் படம் நடிகர் சத்யராஜின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம்.
இப்படி இருக்கையில் அண்மையில் ஒரு மேடை ஒன்றில் வெளிப்படையாக தான் வில்லனாக நடிப்பது குறித்து பல படங்களை கிண்டல் செய்து இருப்பதாகவும் ஒப்பனாக பேசினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘நான் சத்யராஜாக இருப்பதற்கு ஒரே காரணம் மணிவண்ணன் சார் தான். பல பேர்ல அவர் ஒருத்தர் இல்லை அவர் ஒரே ஆள் தான் காரணம். அதாவது ‘நூறாவது நாள்’ படத்துல 24 மணி நேரத்துல என்னை வில்லனாக்கிய மணிவண்ணன்.
இந்த படத்துக்கு பின், அடுத்த ஒரு வருடத்தில் 27 படத்துல வில்லனாக நடித்தேன். அப்போ உள்ள சத்யராஜே பார்க்கவே முடியாது. அப்போது எனக்கு பொறுப்பே கிடையாது பொறுப்பில்லாதவன், அப்போ ஒரு படத்தில் வில்லனாக நடிக்கும் போது இந்த படத்தை எல்லாம் நான் நடிக்கணுமா அப்படின்னு நக்கலாக பேசுவேன்.
என்ன எழவு படும் இது அப்படின்னு கிண்டலாக பேசுவேன். சரி நமக்கு நடிச்ச காசு வருது, அது இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள விவகாரம் அப்படின்னு சொல்லிட்டு ஜாலியா நடிச்சிடுவேன். ஒரு காலத்தில் ஹீரோகளுக்கு பஞ்சம் வருது, பாரதிராஜா சார் காலகட்டத்தில் நிறைய ஹீரோவாக்கள் வந்தார்கள்.
அப்புறம் அவர்கள் எல்லாம் காலாவதியானார்கள், அதன் பின் என்னை கம்பெல் சரியாக ஹீரோவாக நடிக்க சொல்லி சொன்னாங்க. அதன் பின் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நான் என்று சத்யராஜ் கூறிஉள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…