சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்ததற்கு இத்தனை நாள் சம்பளம் தராதற்கு வட்டி சேர்த்து தரவேண்டும் என ஹீரோ அரவிந்த் சாமி கூறுகிறாராம்.
H.வினோத் இயக்கத்தில் 2014இல் வெளியாகி நல்ல வெற்றியையும், பலரது பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் சதுரங்க வேட்டை. இந்த திரைப்படம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்த பெரிய மோசடிகளை தோலுரித்து காட்டியது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் சில வருடங்களுக்கு முன்னர் அரவிந்த் சாமியை ஹீரோவாக வைத்து தொடங்கப்பட்டது. சதுரங்க வேட்டை-2 என தலைப்பு வைக்கப்பட்டு நிர்மல் குமார் என்பவர் இயக்கி வந்தார். திரிஷா ஹீரோயினாக நடித்து வந்தார்.
இந்த படத்தின் வேலைகள் கடந்த 2,3 வருடங்களாக நடைபெற்று வந்ததால், அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கி இருந்துள்ளது. இதனால், அவரும் டப்பிங் பேசாமல் இருந்து வந்தார். கடைசியில் ஒரு பைனான்சியர் முன்னிலையில் சம்பளம் 50 லட்சம் என பேசி இறுதி செய்யப்பட்டதாம். அதற்கு அரவிந்த் சாமியும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கடைசியில், அரவிந்த் சாமி அந்த 50 லட்சம் சேர்த்து இத்தனை நாள் தராததற்கு வட்டி போட்டு தர வேண்டும் என கூறிவிட்டாராம். சம்பள பாக்கிக்கு வட்டி கேட்ட கோலிவுட் நடிகர் இவர் தான் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…