Ghilli sister [file image]
Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, பிரகாஷ் ராஜ், தாமு, நாகேந்திர பிரசாத், ஜானகி சபேஷ், மயில்சாமி, நான்சி ஜெனிபர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
இந்த கில்லி திரைப்படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன ஒக்கடு படத்தின் தமிழ் ரிமேக் தான். தமிழில் இந்த கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. படம் வெளியாகி 20 வருடங்களுக்கு பிறகு கூட கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா என்ற கதாபாத்திரத்தில் ஜானகி சபேஷ் என்பவர் நடித்து இருப்பார். ஆனால், படத்தில் முதலில் அந்த கதாபாத்திரமே கிடையாதாம். அந்த தங்கை கதாபாத்திரத்திற்கு பதிலாக முதலில் தம்பி கதாபாத்திரம் ஒன்று தான் இருந்ததாம். அந்த தம்பி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க்க அழகி படத்தில் சிறிய வயது பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த சதீஷ் ஸ்டீபனிடம் தான் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம்.
படத்தில் அவர் நடிக்கவும் சம்மதம் தெரிவித்த நிலையில், அவரை வைத்து இயக்குனர் தரணி டெஸ்ட் ஷூட்டும் எடுத்தாராம். அந்த டெஸ்ட் ஷூட் எடுத்து முடித்த பிறகு தான் இயக்குனர் தரணி அந்த கதாபாத்திரத்தை தங்கையாக மாற்றி வைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்து மாற்றினாராம். இந்த தகவலை சதீஷ் ஸ்டீபன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…