பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு ஒருமுறை எலிமினேஷன் அரங்கேறி வருகிறது. அதன்படி இதுவரை போட்டியில் இருந்து ராகுல் தாத்தா, மனோ பாலா, அந்தோணிதாசன் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இப்படி இருக்கையில், தற்போது 7 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் உள்ளன. அதிலிருந்து ஒருவர், இந்த வாரம் வெளியேற போகிறார் என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. யார் இந்த வாரம் வெளியேற போகிறார் என்ற கவலை ரசிகர்களுக்குக்கு இருந்தது. அதன்படி, நேற்றைய எபிசோடியில் சந்தோஷ் பிரதாபி குறைவான மதிப்பெண்கள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறியதனால் அங்கிருந்த போட்டியாளர்களும் ரசிகர்களும் காவலடைந்தனர்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சந்தோஷ் பிரதாப் வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் “ரொம்ப நாள் கழித்து சிறிய வயதில் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி போகும்போது ஏண்டா போகலாம்னு இருக்கும் அந்த மாதிரி இப்ப குக் வித் கோமாளி-யிலிருந்து செல்வது அப்படித்தான் இருக்கு.
இன்னொன்னு சந்தோஷமாகவும் இருக்கிறது. நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் என்னுடைய குடும்பத்தினர் மாதிரி அவங்க எல்லாரும் இருக்காங்க நல்லா சமைக்க போறாங்க அந்த ஒரு சந்தோஷம் இருக்கிறது. என்னால் யாரும் வெளியே செல்லவில்லை. என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, உங்களையும் குடும்பத்தினராக தான் பார்க்கிறேன். எனக்கு ஷூட்டிங் இல்லை என்றால் கண்டிப்பாக வைல்ட் கார்டு மூலம் திரும்பி வருவேன். அப்படி இல்லையென்றால், படத்தில் நடித்து உங்களை பெருமை படுத்துவேன் ” எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…