பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு ஒருமுறை எலிமினேஷன் அரங்கேறி வருகிறது. அதன்படி இதுவரை போட்டியில் இருந்து ராகுல் தாத்தா, மனோ பாலா, அந்தோணிதாசன் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இப்படி இருக்கையில், தற்போது 7 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் உள்ளன. அதிலிருந்து ஒருவர், இந்த வாரம் வெளியேற போகிறார் என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. யார் இந்த வாரம் வெளியேற போகிறார் என்ற கவலை ரசிகர்களுக்குக்கு இருந்தது. அதன்படி, நேற்றைய எபிசோடியில் சந்தோஷ் பிரதாபி குறைவான மதிப்பெண்கள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறியதனால் அங்கிருந்த போட்டியாளர்களும் ரசிகர்களும் காவலடைந்தனர்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சந்தோஷ் பிரதாப் வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் “ரொம்ப நாள் கழித்து சிறிய வயதில் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி போகும்போது ஏண்டா போகலாம்னு இருக்கும் அந்த மாதிரி இப்ப குக் வித் கோமாளி-யிலிருந்து செல்வது அப்படித்தான் இருக்கு.
இன்னொன்னு சந்தோஷமாகவும் இருக்கிறது. நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் என்னுடைய குடும்பத்தினர் மாதிரி அவங்க எல்லாரும் இருக்காங்க நல்லா சமைக்க போறாங்க அந்த ஒரு சந்தோஷம் இருக்கிறது. என்னால் யாரும் வெளியே செல்லவில்லை. என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, உங்களையும் குடும்பத்தினராக தான் பார்க்கிறேன். எனக்கு ஷூட்டிங் இல்லை என்றால் கண்டிப்பாக வைல்ட் கார்டு மூலம் திரும்பி வருவேன். அப்படி இல்லையென்றால், படத்தில் நடித்து உங்களை பெருமை படுத்துவேன் ” எனவும் தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…