சினிமா

இரவு நேரங்களில் படப்பிடிப்பு…ரொம்ப ஏக்கமா இருக்கு! நடிகை சஞ்சிதா ஷெட்டி வேதனை!

Published by
பால முருகன்

சஞ்சிதா ஷெட்டி தற்போது இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் என்பவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயவலை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் அமீரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக படத்தின் படப்பிடிப்பு இரவு நேரங்களில் தான் அதிகமாக எடுத்திருப்பார்கள். இந்நிலையில், இரவு நேரங்களில் பட பிடிப்பு நடைபெற்று வந்ததால் சற்று கஷ்டமாக இருந்ததாக நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” மாயவலை படத்தின் படப்பிடிப்பு விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட்டில் நடைபெற்றது.

அங்கு படப்பிடிப்பு நடைபெற்றபோது எனக்கு பழைய நினைவுகள் தான் நினைவுக்கு வந்தது. ஏனென்றால், அதே இடத்தில் தான் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் ரவிக்கு ஜோடியாக, என்னுடைய முதல் தமிழ்த் திரைப்படமான தில்லாலங்கடி படத்தில் நடித்தேன். எனவே அந்த நினைவுகள் தான் எனக்கு வந்தது. மாயவளையின் மற்றொரு பகுதி படப்பிடிப்பு நள்ளிரவு நேரத்தில் ECR பகுதியில் நடைபெற்றது.

ஹீரோயினா நடிச்சு போர் அடிச்சிட்டு! அதான் அப்படி இறங்க போறேன்- வசுந்தரா பேச்சு!

அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரும் தாமதமாக தூங்கியதால், நாங்கள் அனைவரும் சத்தம் போடுவதையும் அவர்களுக்கு இடையூறு செய்வதையும் தவிர்க்க வேண்டியிருந்தது.அந்த நேரத்தில் மட்டும் படம் எடுக்க ரொம்பவே கஷ்ட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் சத்தமாக பேசி கொள்ள முடியாது என்ற காரணத்தால் போன் மூலம் தான் அணைத்து விஷயங்களை தெரிந்துகொண்டோம்.

எப்படியோ ஒரு வழியாக படத்தை நல்லபடியாக எடுத்து முடித்துவிட்டோம். படமும் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், மாயவலை படக்குழுவுடன் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திடீரென படப்பிடிப்பு எல்லாம் முடிந்து வீட்டிற்கு கிளம்புகிறோம் என்றவுடன் ஒரு கஷ்ட்டம் இருந்தது” எனவும் நடிகை சஞ்சிதா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகை சஞ்சிதா ஷெட்டி அழுக்கன் அழகக்கிரன், தில்லாலங்கடி, கொல்லைக்காரன், சூது கவ்வும், என்னோடு விளையாடு, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  நடித்த சூது கவ்வும் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

10 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

10 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

11 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

11 hours ago