பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் வெளியான சம்யுக்தா தனது குடும்பத்துடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .அந்த வகையில் டாப்பிள் கார்டு மூலம் நாமினேஷனில் சிக்கிய சம்யுக்தா எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் வெளியேறினார் .
அதன் பின் அவர் கூறியதாவது ,இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவேன் என்று தான் எதிர்ப்பார்க்கவில்லை என்றும்,அது தனக்கு கஷ்டமாக தான் இருப்பதாகவும்,ஆனால் அதே நேரத்தில் தனது மகனை காண போகிறோம் என்ற மகிழ்ச்சி உள்ளதாகவும் கூறினார் .மேலும் இங்கிருந்து நிறைய அனுபவங்களையும் , நண்பர்களையும் கொண்டு செல்வதாகவும் கமலிடம் கூறினார்.
இந்நிலையில் 8 வாரங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்த சம்யுக்தாவை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர் .பின் தனது மகனை கட்டி அணைத்து அன்பை பகிர்ந்து கொண்டுள்ளார் . பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் சம்யுக்தா தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…