பத்திரிகையாளர் செல்போனை பிடுங்கிய சல்மான்கான்

Published by
murugan

நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் சல்மான் கான் மீது அசோக் ஷியாமிலல் பாண்டே என்ற பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார்.

கடந்த புதன் கிழமை மும்பை ஜுகுவிலிருந்து காந்திவிலி செல்லும் சாலையில் அசோக் ஷியாமிலல் பாண்டே மற்றும்  தன்னுடைய புகைப்படக்கலைஞர் இர்பானும் சென்று கொண்டிருந்த போது சல்மான்கான் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சல்மான்கான் உடன் பாதுகாவலர்களும் பைக்கில் வந்தனர். அதனால்  பாதுகாவலர்களிடம் வீடியோ எடுத்து கொள்ளலாமா என அனுமதி கேட்டனர். பாதுகாவலர் அனுமதி கொடுத்த பின்புதான் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்கள்.

இந்நிலையில் காரில் இருந்து அசோக் ஷியாமிலல் வீடியோ எடுத்ததை பார்த்த சல்மான் வீடியோ எடுக்கக்கூடாது என எச்சரித்தார். பின்னர் பாதுகாவலர்களும் வீடியோ எடுக்கக்கூடாது என கூறினார்.

அதற்கு பதிலளித்த அசோக் ஷியாமிலல் பாண்டே உங்கள் அனுமதி உடன் தானே வீடியோ எடுத்தோம் என பேசிக்கொண்டு இருந்த போது திடீர்ரென சல்மான் அசோக் ஷியாமிலல் செல்போனை பிடுங்கிக்கொண்டார்.

பிறகு சிறிது நேரம் கழித்து பாதுகாவலர்கள் செல்போனை அவர்களிடம் கொடுத்து விட்டனர். இந்நிலையில் அசோக் ஷியாமிலல் செல்போனை பறித்தற்காக காவல்துறையிடம் புகார் கொடுத்து உள்ளார்.

சல்மான்கான்  தரப்பில் அனுமதி இன்றி வீடியோ எடுக்கப்பட்டது என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

குக் வித் கோமாளி டைட்டில் வென்ற பிரியங்கா! பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி…

7 mins ago

துணை முதலமைச்சரின் ‘முக்கிய’ அதிகாரங்கள்.., உச்சநீதிமன்றம் கூறுவதென்ன.?

சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…

13 mins ago

வாரத்தின் முதல் நாளில் சிறிதளவு சரிந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…

26 mins ago

INDvsBAN : தொடங்கியது 4-ஆம் நாள் ஆட்டம்! வங்கதேச அணி ஆதிக்கம்?

கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…

31 mins ago

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசுக்கு துணையாக இருப்பார் – சபாநாயகர் அப்பாவு.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே,…

39 mins ago

ஹிஸ்புல்லா தலைவர் மறைவு.. இஸ்ரேல் பயன்படுத்திய 900 கிலோ அமெரிக்க குண்டுகள்.!

லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா…

42 mins ago