Ritika Singh injury [File image]
நடிகை ரித்திகா சிங் சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு இருந்தே ஒரு பாக்ஸர் தான். இதன் காரணமாகவே அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங் தற்போது ரஜினிகாந்துடன் அவருடைய 170-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஜெய் பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான டி.ஜே.ஞானவேல் தான் ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்குகிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் தான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்து கொண்டு இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்காக ரித்திகா சிங் கடுமையான உடற்பயிற்சிகளில் எல்லாம் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டவாறு வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அந்த மாதிரி கெட்டப் மட்டும் போடவே மாட்டேன்! நடிகை சரண்யா அதிரடி!
தலைவர் 170 படத்திற்கான படப்பிடிப்பின் போது சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்ததாம். அந்த சமயம் தான் நடிகை ரித்திகா சிங்கிற்கு கண்ணாடிகள் உடைந்து தன்னுடைய கைகள் கீறப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ” சில சமயம் எது நடக்குமோ அது தான் நடக்கும், பரவாயில்லை நான் கைப்பிடியை விட்டதால் எனக்கு இந்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த காயம் காரணமாக என்னால் படப்பிடிப்பில் இப்போது கலந்துகொள்ளமுடியாது. ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் விரைவில் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்” என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கவனமாக இருங்கள் என எச்சரித்து வருகிறார்கள். தலைவர் 170 படத்திற்காக இப்படி கடினமான காட்சிகளில் ரித்திகா சிங் நடித்து வருவதால் கண்டிப்பாக அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேச கூடிய வகையில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…