சினிமா

தலைவர் 170 படப்பிடிப்பின் போது காயம்! வேதனையில் நடிகை ரித்திகா சிங்!

Published by
பால முருகன்

நடிகை ரித்திகா சிங் சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு இருந்தே ஒரு பாக்ஸர் தான். இதன் காரணமாகவே அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங் தற்போது ரஜினிகாந்துடன் அவருடைய 170-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜெய் பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான டி.ஜே.ஞானவேல் தான் ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்குகிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் தான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்து கொண்டு இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்காக ரித்திகா சிங் கடுமையான உடற்பயிற்சிகளில் எல்லாம் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டவாறு வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்த மாதிரி கெட்டப் மட்டும் போடவே மாட்டேன்! நடிகை சரண்யா அதிரடி!

தலைவர் 170 படத்திற்கான படப்பிடிப்பின் போது சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்ததாம். அந்த சமயம் தான் நடிகை ரித்திகா சிங்கிற்கு கண்ணாடிகள் உடைந்து தன்னுடைய கைகள் கீறப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ” சில சமயம் எது நடக்குமோ அது தான் நடக்கும், பரவாயில்லை நான் கைப்பிடியை விட்டதால் எனக்கு இந்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த காயம் காரணமாக என்னால் படப்பிடிப்பில் இப்போது கலந்துகொள்ளமுடியாது. ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் விரைவில் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்” என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கவனமாக இருங்கள் என எச்சரித்து வருகிறார்கள். தலைவர் 170 படத்திற்காக இப்படி கடினமான காட்சிகளில் ரித்திகா சிங் நடித்து வருவதால் கண்டிப்பாக அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேச கூடிய வகையில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago