பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி மாரடைப்பால் காலமானார்.
ஸ்ரீனிவாச மூர்த்தி :
டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி சூர்யா , அஜித், மோகன் லால், ராஜசேகர், விக்ரம் என பல டாப் நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். பல ஆண்டுகளாக சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்த ஸ்ரீனிவாச மூர்த்தி இன்று மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
இவரது திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கு சினிமா பிரபலங்களும், தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யா இரங்கல்
ஸ்ரீனிவாச மூர்த்தி மறைவுக்கு நடிகர் சூர்யாவும் தனது இரங்கலை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டரில் கூறியிருப்பதாவது ” இது மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு .. ஸ்ரீனிவாசமூர்த்தி உங்களுடைய குரல் மற்றும் உணர்ச்சிகள் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. உங்களை மிஸ் செய்வேன் அன்பே ஐயா! சீக்கிரம் சென்றுவிட்டார்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். ஸ்ரீனிவாச மூர்த்தி சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் தெலுங்கு மொழிக்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…