Categories: சினிமா

கணவர் இயக்கத்தில் நயன்தாரா? அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க அதிரடி முடிவு!

Published by
பால முருகன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவருமே ஒன்றாக இணைந்து கொண்டு தான் இப்போது வெளியே எங்கயாவது செல்வது என இருந்துகொண்டு இருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வந்ததும் ஜோவிகாவுக்கு அடித்த ஜாக்பாட்?.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது அப்போது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில், படத்தில் எந்த பிரபலங்கள் எல்லாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள் என்பதற்கான சில தகவல்களும் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் இயக்குனர் மிஷ்கின் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவலை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அது என்ன கதாபாத்திரம் என்றால் பிரதீப் ரங்கநாதனுக்கு  அக்காவாக நடிக்கும் ஒரு கதாபாத்திரம் தான். ஏற்கனவே, லவ் டுடே எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள பிரதீப் ரங்கநாதனுடைய மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருக்கிறது. இவர் இப்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து அந்த படம் வெளியானால் அந்த படம் பல கோடிகள் வசூல் செய்துவிடும். இந்த சூழலில் அவருடன் நயன்தாராவும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக அந்த படத்தின் வசூல் பல கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே, நயன்தாரா இமைக்கா நொடிகள் படத்தில் ஆதர்வாவுக்கு அக்காவாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago