வெற்றிமாறன் இல்லை! ‘தளபதி 69’ இயக்குனர் இவரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Published by
பால முருகன்

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற கேள்வி தான் ரசிகர்களின் மனதில் தற்போது விடைகிடைக்காத ஒன்றாக இருந்து வருகிறது. விஜய் அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். இதனை விஜய்யே அறிக்கை வெளியீட்டு அறிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து விஜயின் 69-வது படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் பரவி கொண்டு இருக்கிறது. கடைசியாக வெற்றிமாறன் தான் விஜயின் 69-வது படத்தை இயக்குவார் என்றும் தகவல்கள் பரவியது. அதற்கு முன்னதாக எச்,வினோத், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால், இன்னும் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

குழந்தை வரத்தை அள்ளித் தரும் கர்ப்பரட்சாம்பிகை கோவில்..! மருத்துவத்தையும் மிரள செய்யும் அதிசயம்..!

இந்த நிலையில், தற்போது தளபதி 69 படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தளபதி 69 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கடைசியாக குண்டூர் காரம் எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்-ம் ஒருவர் தான். அங்கு அவர் அந்த அளவிற்கு பிரபலமான ஒரு இயக்குனர். எனவே இவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கலாம் என விஜய் திட்டமிட்டு இருக்கிறாராம். இதுவும் தகவலா அல்லது உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரிய வரும். மேலும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

4 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

5 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

6 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

6 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

7 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

8 hours ago