புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா . படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பருக்கு தள்ளி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது புஷ்பா 2 படம் குறித்து ஆங்கில இதழ் ஒன்று எழுதியுள்ள செய்தி சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. அது என்ன செய்தி என்றால், படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சுகுமார் புஷ்பா கோபத்தில் தனது ஐபோனை வீசி உடைத்த செய்தி தான். இந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கும் பணியில் நடிகர்கள் யாரும் சரியாக நடிக்கவில்லை என்பதால் சுகுமார் மிகவும் கோபமடைந்துவிட்டாராம்.
இதன் காரணமாக தான் கடும் கோபத்தில் இயக்குனர் சுகுமார் போனை உடைத்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. உண்மையில் இந்த தகவல் பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் இதனை பற்றி இயக்குனர் சுகுமார் அல்லது படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீதேஜ், அனசூயா பரத்வாஜ், திவி வத்யா, ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…