கடைசி நேரத்தில் அலெக்ஸாண்டர் படத்திற்கு வந்த பிரச்சனை..2 நாள் தூங்காமல் கேப்டன் விஜயகாந்த் செஞ்ச விஷயம்!

Published by
பால முருகன்

Vijayakanth : அலெக்ஸாண்டர் படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கலை விஜயகாந்த் தீர்த்து வைத்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

கேப்டன் விஜயகாந்த் படங்களில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் அவருடன் படங்களில் நடித்த போது படப்பிடிப்பு தளங்களில் நடந்த சம்பவம் பற்றியும் நடிகர்கள், நடிகைகள் பேசுவது உண்டு. அப்படி தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுப்பு பஞ்சு அருணாசலம் அலெக்ஸாண்டர் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

இது குறித்து பேசி அவர் அலெக்ஸாண்டர் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு முறை இரண்டு நாட்கள் விஜயகாந்த் தூங்காமலே வேலை செய்தார். அதற்கு காரணமே படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியதுதான். ஏனென்றால் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் பாக்கி இருந்தது. நாங்கள் படம் ஆரம்பிக்கும் போதே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டோம்.

கிளைமாக்ஸ் காட்சி ஒரு காட்சி தானே என்று சில நாட்கள் தள்ளிக்கொண்டே சென்று போனது. அதன் பிறகு மழைக்காலம் தொடங்கியது எனவே கிளைமாக்ஸ் காட்சி பீச் ஓரமாக எடுக்க வேண்டி இருந்தது எனவே சரியாக கிளைமாக்ஸ் காட்சி எடுக்க சென்றாள் கேமரா வைத்த அந்த நாளே மழை பெய்து விடும். இப்படியே சில நாட்கள் கடந்து கடந்து சென்றது.

எனவே படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் 14 நாட்கள் இருந்த  நிலையில் கண்டிப்பாக இந்த கிளைமாக்ஸ் கட்சியை சூட் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம். அந்த சமயம் பிரகாஷ்ராஜ் மற்றும் படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்களுக்கு கால் சீட்டும் சரியாக கிடைக்கவில்லை. அதன் பிறகு கேப்டன் விஜயகாந்த் எப்படியோ பேசி கால் சீட் வாங்கி இரண்டு நாட்கள் அவர்களை நடிக்க வைத்தார்.

அந்த இரண்டு நாட்களும் கேப்டன் விஜயகாந்த் தூங்காமலே வேலை செய்துகொண்டிருந்தார்.  கேப்டன் மட்டும் அப்படி தூங்காமல் வேலை செய்யவில்லை என்றால் கண்டிப்பாக அந்த படத்தின் வேலை சீக்கிரமாக முடிந்திருக்குமா என்பது சந்தேகம் தான்” எனவும் சுப்பு பஞ்சு அருணாசலம் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

10 mins ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

20 mins ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

1 hour ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

1 hour ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago