வாடிவாசல் படத்துக்கு கிடைத்த விடுதலை! முழு பார்மில் இறங்கும் வெற்றிமாறன்!

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

vadivasal

சென்னை : சூர்யா ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்கும் என்று தான். இந்த படம் அறிவிக்கப்பட்டு சில ஆண்டுகள் கடந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் கமிட் ஆன காரணத்தால் அந்த படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் சூர்யா வேறு படங்களில் கமிட் ஆகிவிட்டார்.

அதன்பிறகு வெற்றிமாறன் விடுதலை 2 படத்திற்கான வேலைகளில் வெற்றிமாறன் ஈடுபட்டார். இதன் காரணமாக,  தான் இன்னும் வாடிவாசல் படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் சமூக வலைத்தளங்களில், வாடிவாசல் படம் அப்படியே ட்ராப் செய்துவிட்டதாகவும், சூர்யா படத்தில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் வேறு ஹீரோவை வைத்து வாடிவாசல் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது வாடிவாசல் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், படம் கண்டிப்பாக விரைவில் தொடங்கும் எனவும் கூறி பரவிய வதந்தி தகவலுக்கு வெற்றிமாறன் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், தற்போது வாடிவாசல் படம் எப்போது தொடங்கப்படும் என்பதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் 2-வது பாகம் வெளியாகவுள்ளது. அதைப்போல அதற்குள் சூர்யாவும் தன்னுடைய 44-வது திரைப்படத்தில் நடித்து முடித்துவிடுவார். இருவரும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களை முடித்த பிறகு அடுத்த ஆண்டு முதல் வாடிவாசல் படத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்