சினிமா

ரொம்ப அச்சுறுத்தலா மாறிடும்! ராஷ்மிகாவுக்கு நடந்த சம்பவத்தை பார்த்து பயந்த மஞ்சிமா மோகன்!

Published by
பால முருகன்

நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கழுத்திற்கு கீழே கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு சென்றது போல வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா இல்லை அது AI தொழில் நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று தெரிய வந்தது. ஆனால், அச்சு அசலாக அந்த வீடியோவில் இருக்கும் முகம் ராஷ்மிகாவை போல இருந்தது.

இதன் காரணமாகவே இப்படியா உடை அணிந்து செல்வது என ராஷ்மிகாவுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். பிறகு, நடிகர் அமிதாப் பச்சன் இது முற்றிலும் எடிட் செய்யப்பட்ட வீடியோ இதனை பதிவு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பிறகு ராஷ்மிகாவும் இதற்கு விளக்கம் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், ஒரு நடிகையின் முகத்தை இப்படி வைத்து மார்பிங் செய்து வீடியோ வெளியிட்டது குறித்து பல பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து  வருகிறார்கள். குறிப்பாக நாகசைதன்யா, சின்னமையி,  கே.கவிதா உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை மஞ்சிமா மோகன் “ராஷ்மிகாவுக்கு நடந்த இந்த சம்பவம் மிகவும் பயமாக இருக்கிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் இது எதிர்காலத்தில் பெரிய அச்சறுத்தலை ஏற்படுத்தும்” என கூறிள்ளார்.

மேலும்,தனது மார்பீங் வீடியோ குறித்து விளக்கம் கொடுத்த ராஷ்மிகா ” ஆன்லைனில் பரப்பப்படும் அந்த மார்பீங் வீடியோவைப் பற்றி பேசும்போதே ரொம்ப வேதனையாக இருக்கிறது. நான் ஒரு நடிகையாக இருந்ததால் என்னால் இந்த பிரச்சனையை இப்போது சமாளித்து விட முடிகிறது. இதுவே நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது இப்படியானால் நடந்திருந்தால் என்னால் எப்படி சமாளித்து இருக்க முடியும் இரு கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த மாதிரி முகம் மற்றும் தொழில் நுட்பத்தால் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன்பு இதனை பற்றி மற்றவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும்” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…

20 minutes ago

உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!

சென்னை :  தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

51 minutes ago

AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…

1 hour ago

“தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை., 2026-ல் வரலாறு படைப்போம்!” – விஜய் பேச்சு.

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…

1 hour ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!

சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…

2 hours ago

“விஜய் தான் எதிர்கட்சி தலைவர்… அனைத்து அஜெண்டாவும் ரெடி – ஆதவ் அர்ஜுனா அதிரடி.!

சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து…

2 hours ago