நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் இருக்கிறது. இருப்பினும் தாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என விஜய் தேவரகொண்டாவும் சரி, ராஷ்மிகா மந்தனாவும் சரி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இருந்தாலும் இவர்கள் இருவரும் அடிக்கடி ஒரே இடங்களுக்கு சுற்றுலா செல்வது போல இவர்களுடைய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இவர்கள் காதலிப்பது உறுதி என்ற தகவலை வைரலாக்க காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக மாலத்தீவில் விஜய் தேவரகொண்டா இருந்த அதே இடத்தில் ராஷ்மிகா மந்தனா இருந்த புகைப்படமும் கூட மிகவும் வைரலானது.
நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைதள பக்கங்களில் ஒருவருடைய கையை பிடித்துக்கொண்ட வரும் புகைப்படத்தை பகிர்ந்து ” நிறைய நடக்கிறது, ஆனால் இது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது- விரைவில் அறிவிக்கப்படும்” என அறிவித்தும் இருந்தார்.
இதனை பார்த்த பலரும் அந்த புகைப்படத்தில் இருப்பது ராஷ்மிகா மந்தனா தான் எனவும் கூறி வந்தார்கள். இதனையடுத்து, தற்போது ஒரு தகவல் மிகவும் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளார்களாம்.
இவர்கள் இருவரும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சியதார்தம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உண்மையில் இவர்கள் இருவரும் நிச்சியதார்தம் செய்துகொள்ள போகிறார்களா? அல்லது இது வெறும் வதந்திதானா என்பது பற்றி இவர்களே அறிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…