சினிமா

அந்த 2 நடிகர்களுடன் நடிச்சே ஆகணும்! நடிகை ராஷ்மிகா மந்தனா ஆசை!

Published by
பால முருகன்

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால், இன்னும் மலையாளத்தில் ஒரு படத்தில் கூட ஹீரோயினாக நடிக்கவில்லை. அவர் மலையாளத்தில் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும், இரண்டு நடிகர்களுடன் இணைந்து நடிக்க தனக்கு ரொம்பவே ஆசை இருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட  ராஷ்மிகா  தனக்கு 2 நடிகர்களுடன் நடிக்க ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை ராஷ்மிகா ” எனக்கு மலையாள சினிமாவில் படங்களில் நடிக்க விருப்பமாக இருக்கிறது. பஹத் பாசில் கூட ஒரு படத்தில் நடிக்கவேண்டும். அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். கும்பளங்கி நைட்ஸ்  படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்களை வைத்தே அவர் அந்த அளவிற்கு நடித்து வருகிறார் என்றால் சாதாரண விஷயமே இல்லை.

காதலர் நடனத்தை பார்த்து அசந்து போன அதிதி ராவ்! சித்தார்த் மேல ரொம்ப பாசம் தான்!

எனவே, அவருடன் எனக்கு ஒரு படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது.  அவரை போலவே எனக்கு துல்கர் சல்மானுடன் ஒரு படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. விமானத்திற்காக காத்திருந்த போது ஒருமுறை அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் நடிக்கும் படங்களும் எனக்கு பிடிக்கும் சீதாராமன் படத்தில் அவருடன் நடித்திருந்தேன். ஆனால், ஹீரோயினாக ஒரு படத்தில் அவருடன் நடிக்க ஆசை இருக்கிறது” எனவும் நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை ராஷ்மிகா அனிமல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

29 minutes ago

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

2 hours ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

2 hours ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

3 hours ago

நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!

சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…

4 hours ago

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

6 hours ago