மகாராஜா படம் பார்த்து மனதார பாராட்டிய ரஜினிகாந்த்.! எமோஷனலாக நன்றி தெரிவித்த இயக்குனர்!

Published by
பால முருகன்

மகாராஜா : பொதுவாகவே ஒரு நல்ல திரைப்படம் வெளியானது என்றால் அந்த படங்களை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இயக்குனர் மற்றும் படக்குழுவை பாராட்டுவார். அப்படி தான் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ‘மகாராஜா’ படத்தினை பார்த்துவிட்டு இயக்குனரை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த மகாராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதனையடுத்து, படத்தினை பார்த்து ரஜினிகாந்த்துக்கு மிகவும் பிடித்து போக இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை தன்னுடைய வீட்டிற்கு நேரில் அழைத்துள்ளார்.

அழைத்து படம் மிகவும் நன்றாக இருக்கிறது என படம் பற்றி பேசிவிட்டு அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இருவரும் சந்தித்தபோது   எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், வசீகர சந்திப்புக்கு நன்றி. கோலிவுட்டின் தங்கக் கரங்களில் இருந்து வாழ்க்கை, அனுபவம், வாழ்க்கை முறை பற்றிய புரிதல் பற்றிய நாவலைப் படிப்பது போல் இருந்தது.. உங்கள் விருந்தோம்பல் மற்றும் பணிவு என்னை வியக்க வைத்தது. மகாராஜாவை நீங்கள் எந்தளவுக்கு நேசித்தீர்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். மீண்டும் ஒரு நன்றி மற்றும் தலைவர் வாழ்க” என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

13 minutes ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

34 minutes ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

47 minutes ago

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

2 hours ago

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…

2 hours ago

நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…

2 hours ago